கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகிலுள்ள சித்தேஹள்ளி கிராமத்தைச் சார்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், செயல் நுண்ணறிவைப் (AI ) பயன்படுத்தி ‘லவ் யூ’ என்ற திரைப்படத்தை உருவாக்கி உள்ளார். எந்த ஒரு மனிதனையும் பயன்படுத்தாமல் நுண்ணறிவைப் மட்டுமே பயன்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை வெறும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 6 மாத காலத்தில் எடுத்துள்ளார். நூதன் என்கிற கிராபிக் டிசைனரின் உதவியுடன் உருவாகி இருக்கிற இந்த படத்திற்கு ‘லவ் யூ’ என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் பட்ஜெட்டை பெரிய அளவில் மென்பொருளுக்கே செலவிட்டு உள்ளனர் .
இந்த படம் முப்பது வெவ்வேறு செயல் நுண்ணறிவுக் கருவிகளைக் கொண்டு 6 மாதங்களுக்கு முன்னரே, உருவாக்கப்பட்டுள்ளது, இப்போது உள்ள வளர்ச்சியடைந்த செயல் நுண்ணறிவு உதவியுடன் படத்தை இயக்கினால், ஆயிரம் மடங்கு மேலும் சிறப்பானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது .