நீடாமங்கலம், ஜூலை. 06- டிராக்டரில் வயலில் ஏர் விழும் பொழுது ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு மாறும் பொழுது டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்து… டிரைவர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நரிக்குடி பகுதியில் ராஜ் என்பவரது வயலில் ஏர் உழுவும்
பணி நடைபெற்றது. அப்போது
டிராக்டர் ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு மாறும் பொழுது டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த டிராக்டரை இயக்கிய புலவர்நத்தம் பகுதியை சேர்ந்த ராஜாங்கம் என்பவரது மகன் பழனி (45) டிராக்டரின் நடுவில் சிக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.













