அகமதாபாத் : எத்தனை விமர்சனங்கள்… எத்தனை கிண்டல்கள்… எத்தனை கேளிகள்…! 18 ஆண்டுகளாக சுமந்த வலிக்கும், வேதனைக்கும் விடைகொடுத்தது 2025 IPL இறுதிப் போட்டி. பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முக்கியமான நாளில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறங்கியது. அவர்களது எதிரணியானது, கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் ஆசையில் களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி.
பேட்டிங்கில் RCB
டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் பீல்டிங் தேர்வு செய்தார். RCBக்கு தொடக்கம் ஆச்சரியமாக இருந்தது – பிலிப் சால்ட் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஒவ்வொரு வீரரும் 20-30 ரன்கள் எடுத்தே அவுட் ஆனனர். விராட் கோலி இன்று ஆங்கர் இனிங்ஸாக விளையாடி, 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மட்டுமே இருந்தன.
மயங்க் அகர்வால் (24), பட்டிதார் (26), ஜிதேஷ் சர்மா (24), ரொமாரியோ ஷெப்பர்ட் (17) என எல்லோருமே சிறு பங்களிப்புகள் அளித்தனர். கடைசி ஓவரை அர்ஸ்தீப் சிங் சுழற்றியதில் வெறும் 3 ரன்கள் மட்டும் விட்டார் மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவ்வாறாக RCB 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் பதிலடி – ஒட்டுமொத்தமாக தடுமாறிய முதல்நிலை
191 ரன்கள் என்ற இலக்குடன் பிரப்சிம்ரன் மற்றும் பிரியான்ஸ் தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. ஆனால் இருவரும் முறையே 26 மற்றும் 24 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 1 ரன்னில் அவுட் ஆனதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜோஸ் இங்கிலிஷ் 39 ரன்கள் எடுத்தபோதும் மற்றவர்கள் தொடர முடியவில்லை. ஷஷங்ச் சிங் மட்டும் தொடர்ந்தார். கடைசி 4 ஓவர்களில் 55 ரன்கள் தேவைப்பட்டபோதும், புவனேஸ்வர் குமார் மற்றும் யஷ் தயாள் சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணியின் வேகம் குறைத்தனர்.
கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டபோது, ஹசல்வுட் முதல் இரண்டு பந்துகளில் ரன் விடாமல் அழுத்தம் ஏற்படுத்தினார். ஷஷாங் சிங் கடைசி நான்கு பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்தபோதும், வெற்றி கிடைக்கவில்லை. 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது RCB!
கண்ணீர் மல்கிய கோலி
வெற்றியை உறுதி செய்த பிறகு விராட் கோலி மண்டியிட்டு கண்கலங்கினார். IPL தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரே அணியில் தொடர்ந்தவர். “அவனை தவிர மற்றவர்கள் கோப்பை வென்றுவிட்டார்கள்” என்ற விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். 18 வருடங்களாக எதிர்பார்த்த கோப்பை, இறுதியில் கைப்பற்றியதை உணர்ந்த அவர் கண்ணீர் மல்கினார்.