இப்போ ரயிலில் டிக்கெட் முன்பதிவு செஞ்ட்சவங்களோட “CHART LIST” எனப்படும் பயணிகளின் பட்டியல், , ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு வெளியிடப்படுது.
உங்களோட டிக்கெட் waiting list-ல இருக்கு, confirm ஆகுமா-னு இல்லையா? அப்படி என்பதை இந்த “CHART LIST” மூலமா தான் நாம தெரிஞ்சிக்க முடியும்..
இப்படி இருக்கும்போது, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னாடி இப்பட்டியலை வெளியிட்ரதுனால, டிக்கெட் confirm ஆகாதவங்க, மாற்று ஏற்பாடு செய்ய போதிய நேரம் கிடைக்கல்லன்னனு புகார்கள் வந்துச்சி..
குறிப்பாக, கடந்த மாதம் 21 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிகானெருக்கு பிரதமர் மோடி போன போது, இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதா சொல்லப்படுது.
இந்நிலையில, முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், பிகானெர் ரயில் கோட்டத்திற்கு உட்பட்ட ஒரு ரயிலில மட்டும் 24 மணிநேரத்திற்கு முன்னாடியே பயணிகளின் CHART LIST வெளியிடப்பட்ருக்கு… , 24 மணி நேரத்திற்கு முன்பே பயணிகளின் பட்டியலை வெளியிட்ரதுனால, கடைசி நேரத்தில் கூடுதல் பெட்டிகளை இணைக்க முடியாதுன்னு சொல்லப்படுது…
இப்போதைக்கு சோதனை அடிப்படையில் பிகானெரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நடைமுறையின் சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்த பிறகு தான் நாடு முழுவதும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்து இருக்காங்க…