பழனி :
பிரபல திரைப்பட நடிகர் சூர்யா, இன்று காலை பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு விஜயம் செய்து சாமி தரிசனம் செய்தார். மலை அடிவாரத்திலிருந்து ரோப் காரில் ஏறிய சூர்யா, காலை 9 மணிக்கு நடைபெற்ற சிறுகால சந்தி பூஜையில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டார்.
சூர்யா தற்போது நடிக்கவுள்ள 45-வது திரைப்படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. பின்னர் கோயில் தரப்பில் அவருக்கு திருப்பணி பிரசாதம் வழங்கப்பட்டது.
தரிசனத்துக்குப் பின்னர், சூர்யா கோயிலை சுற்றி வலம்வந்து முருகனை தரிசித்தார். இவரது வருகையை அறிந்த பக்தர்கள், சூர்யாவை காண திரண்டனர். அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் ஆர்வமாக முனைந்தனர். சூர்யாவும் சிலருடன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.