கொரட்டூர் ஏரியில் வெயிலின் தாக்கத்தால் சுமார் 2 டன் மீன்கள் செத்து இதனதை அறிந்த அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி பாலமுருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
சென்னை கொரட்டூர் ஏரியில் வெயிலின் தாக்கம் காரணமாக சுமார் இரண்டு டன் அளவிலான மீன்கள் உயிரிழந்து, ஏரி நீரில் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில், கொரட்டூர் ஏரியிலும் நீரின் வெப்பநிலை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏரியில் இருந்த ஏராளமான மீன்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஏரியின் பல்வேறு பகுதிகளில் இறந்த மீன்கள் மிதந்த நிலையில் காணப்பட்டதால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
மேலும், இறந்த மீன்களை உடனடியாக அகற்றாவிட்டால், சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பாலமுருகன், உடனடியாக அம்பத்தூர் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை தாமதமின்றி அப்புறப்படுத்தி, அப்பகுதியில் சுகாதார பாதிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் மண்டல பணியாளர்கள், ஏரியில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மீன்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் க.பாலமுருகன், ஏரியின் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஏரியில் அதிகளவில் வளர்ந்துள்ள வெங்காயத் தாமரை செடிகளையும் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.












