ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.
ராகுல் காந்தி மீது உத்தரகாண்ட் மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட FIR-ஐ கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் சென்னை சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செ.சிவா தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சீனுவாசகுமார், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுரேஷ் ராம், நாராயணசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் முபாரக் அலி, காஜா மொய்தீன், சுந்தர், இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட SC/ST பிரிவு தலைவர் சேகர், மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் அப்துல் ரஷீத் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் RSS அமைப்பின் தூண்டுதலின் பேரில் ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியினர், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

















