மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான ஐந்தாயிரம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து சேதம், விவசாயிகள் வேதனை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாடுதுறை மணல்மேடு செம்பனார்கோயில் சீர்காழி குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக வயல்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த ஆண்டு 90ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒரு சில இடங்களில் முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று காற்றுடன், பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக நெல் தரம் குறைவதுடன் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் பொழுது நெல்மணிகள் தரையில் சிதறி விளைச்சல் குறையும் என்றும் இயந்திரத்தின் வாடகை அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த தொகை கூட கையில் கிடைக்காது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பைட்: –
1.வைத்தியநாதன் விவசாயி
2.கருணாநிதி விவசாயி













