திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹெல்த வாணியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கே கலந்துக் கொண்ட பொதுக் கூட்ட மேடையில் அவர் பேசி முடித்தவுடன் கங்கை நீரால் புனித படுத்துகிறோம் என்ற பெயரில் வலுது சாரி அமைப்புகள் நடத்திய ஜனநாயக படுகொலை நிகழ்வை கண்டித்து விழுப்புரம் வடக்கு எஸ்.ஸி பிரிவு சார்பில் திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் போராட்டம் நடைபெற்றது. இதில் SC துறைமாநில துணை தலைவர் உதயவாணன் தலைமை தாங்கினார்.இதில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ரங்கபூபதி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் நகரத் தலைவர் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும் பாஜக கட்சிக்கு எதிராகவும்
ஆர்.எஸ்.எஸ் அமைக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, பட்டணம் கார்த்திக்,தனுசு,மதன்குமார்,சூரியமூர்த்தி,பார்த்திபன்,தில்குமார், இலகண்ணன்,செல்வம், மெடிக்கல் வெங்கட்,ஜெய் கணேஷ்,அஜீஸ், பொன் ராஜா,பொன்ராஜா, ஜெய்கணேஷ்,கார்த்திக்,லட்சுமி,காளியம்மாள் சூரியமூர்த்தி மெடிக்கல் செல்வோம் வினோபா இருதயராஜ் தோமினிக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.















