கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வினியோகம்
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. இதையொட்டி, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் குமரி மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தொழிலதிபரும் தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகியுமான பால்ராஜ் முன்னெடுப்பில், பல்வேறு பகுதிகளில் த.வெ.க. அரசின் 100 நாள் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் களப்பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி, நடுத்தர மற்றும் எளிய குடும்பங்களின் மாதாந்திரச் சுமையைக் குறைக்கும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், பெண்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான சிறப்பு நலத்திட்டங்கள் என அனைத்து திட்டங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் த.வெ.க. அரசின் 100-வது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிலதிபரும் தமிழக வெற்றி கழக நிர்வாகியுமான பால்ராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.பொதுமக்கள், பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு இனிப்புகளை வழங்கி, துண்டுப் பிரசுர வினியோகத்தை மாவட்டச் செயலாளர் மாதவன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேருந்து நிலைய வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதற் கட்டமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர் பிரேம் 6ற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, பொதுமக்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.















