மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் நூற்றுக்கணக்கானோர் தீமிதித்து அம்மனை வழிபட்டனர், தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா கடந்த 24ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற நிலையில் ஒன்றாம் தேதியான சனிக்கிழமை கூழ் ஊற்றுதல் அக்னி சட்டி புறப்பாடு உள்ளிட்டவைகள் நடைபெற்று பக்தர்கள் விரதம் இருந்து வந்த நிலையில் பத்தாம் நாள் ஆன என்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது கோவில் அருகே பக்தர்கள் சாமி ஊர்வலத்துடன் கரகங்கள் ஏந்தி ஊர்வலமாக வந்து கோவிலில் முன்பு உள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து ஓசூரம்மனை தரிசனம் செய்தனர் இந்நிலையில் தீ மிதிக்கும் போது முதியவர் ஒருவர் அக்னி குண்டத்தில் கால் தவறி விழுந்ததில் காவல்துறையினர் பொதுமக்கள் அவரை மீட்ட நிலையில் முதியவருக்கு இரண்டு தோள்பட்டையில் தீக்காயங்கள் ஏற்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டது இதை அடுத்து தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து அவர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர் தீமிதி திருவிழாவில் பட்டாசுகள் வானவேடிக்கையில் வெடிக்கப்பட்ட நிலையில் தீமிதி திருவிழாவின்போது முதியவர் ஒருவர் பால் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















