மேகதாது அணை பிரச்சனையில், தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய ஜல்சக்தி துரையின் அமைச்சகத்தின் கருத்துக்கு, தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை, இதனை நெறிப்படுத்த வேண்டிய மத்திய அரசு பாராமுகமாக இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது,, செம்பனார்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி :-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மேகதாது அணை பிரச்சனையில் நமக்கு உரிய பங்கை கேட்டு பெற, முதலமைச்சர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார், முந்தைய திமுக அதிமுக அரசுகளில் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடகா அரசு மதிக்கவில்லை, பலமுறை தண்ணீர் திறக்க உத்தரவிட்டும் அதனை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. புதிய முயற்சியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் முயற்சி மேற்கொண்டுள்ளார் என்று தெரிவித்தார். மேகதாது அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, இது பற்றி அனைத்துக் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, எதிர்ப்பு தெரிவிப்பதனால் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை, இதனை நெறிப்படுத்த வேண்டிய மத்திய அரசு காவிரி நீர் பிரச்சனையில் பாராமுகமாக இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது, எனவே முன் முயற்சியாக சமூகத் தீர்வு எட்ட பேச்சுவார்த்தை மூலம் முயற்சி செய்கிறார் முதலமைச்சர் என்று தெரிவித்தார். வறட்சி காரணமாக விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஐந்தாம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை செய்கிறார். இதில் நல்ல தீர்வு எட்டப்படும் என்று தெரிவித்தார். வக்ப் வாரியத்திற்கு சொந்தமான பள்ளிவாசல்கள், கபர்ஸ்தலங்கள், வழிபாட்டு தலங்கள் இவற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் .
பைட்: –
ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்













