காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் செய்து தந்தை கைவிட்ட குடும்பத்தை காப்பாற்றி வரும் கல்லூரி மாணவர், செல்போனில் மூழ்கிக் கிடக்கும் இளைய தலைமுறை மத்தியில், உழைப்பை நம்பி படிப்பை தொடரும் தன்னம்பிக்கை இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காலை 5:00 மணி முதல் 8 மணி வரை, கீரை விற்பனை செய்யும் ஒரு கல்லூரி மாணவனை பார்க்க முடியும், அதே மாணவன் மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை கீரை கட்டுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பார். கிருத்திக் என்ற, படிக்கும் வயது இளைஞன் வியாபாரம் செய்து கொண்டுள்ளது பலரது புருவங்களை ஆச்சரியக்குறியாக பார்க்கத் தோன்றும் . ஆனால் அவருக்குள் இருக்கும் சோக கதைகளை மீறி, சாதிக்கும் தன்னம்பிக்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இவரது தந்தை ஆனந்தன் என்பவர், பல ஆண்டுகளுக்கு முன்பு, கிருத்திக் மற்றும் அவனது இரு தங்கைகள், தாயை தவிக்க விட்டு, குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். சிறு சிறு வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த இவரது தாய் ஆனந்திக்கு உதவியாக, கொரோனா காலகட்டத்தில், சைக்கிளில் சென்று டீ கேனில் விற்பனை மேற்கொண்டு குடும்பத்தில் உதவியுள்ளார். தற்பொழுது தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் படித்து வரும் கிருத்திக், பகலில் கல்லூரிக்கு செல்கிறார், காலை மற்றும் மாலை வேளைகளில் இருசக்கர வாகனத்தில் கீரை கட்டுகளை விற்பனை செய்கிறார். இவரது வருமானம் மூலம் இவரது குடும்பம் வாழ்க்கையை நடத்துவதுடன், தனது இரு தங்கைகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்துக் கொள்கிறார். நாள் ஒன்றுக்கு தோராயமாக 100 கட்டு கீரையை விற்பனை செய்யும் இவர் இதன் மூலம் தினமும் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி கொண்டு கல்லூரி படிப்பையும் தொடர்கிறார். செல்போன் கஞ்சா போதை பொருட்களில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை மத்தியில் படிப்பை தொடர்ந்து கொண்டு வியாபாரமும் மேற்கொள்ளும் கிருத்திக்குக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு கிருத்திக் ஒரு உதாரணம் என்றால் அது மிகையில்லை.
பைட் :-
கிருத்திக் – கல்லூரி மாணவர்













