பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முதலமைச்சராகுவது உறுதி – வரும் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் we the leaders இயக்க முதல் மாநாடு மாபெரும் அரசியல் மாற்றம் திகழப்போகிறது – அண்ணாமலை ஆதரவாளரும், தொழிலதிபருமான சிவகுமார் நாகர்கோவிலில் பேட்டி.
பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை அண்மையில் பாஜகவில் இருந்து விலகி we the leaders என்ற பெயரில் புதிய இயக்கத்தை தொடங்கினார் இயக்கத்தின் முக்கிய கொள்கையான போதை பொருள் பயன்பாட்டு கலாச்சாரத்தை முற்றிலும் நிறுத்துவதற்கான முன்னெடுப்பாக இந்த இயக்கத்தை தொடங்கியதாக தெரிவித்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அண்ணாமலை அணியினர் போதையின் பாதையில் செல்லாமல் இருக்க விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை ஆதரவாளர் சிவக்குமார் தலைமையில் விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு போதையில் பிடியில் சிக்காமல் இருக்க விளையாட்டு வீரர்கள் உடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ள we the leaders இயக்க முதல் மாநாடு விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கலந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். மாநாடு மாபெரும் வெற்றியடைந்து அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் மாநாடாக அமைய இருக்கிறது. மேலும் குறிப்பாக அண்ணாமலை விரைவில் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்பது உறுதி என அண்ணாமலை ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.













