திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் மாநில தலைவர் சுகுமாரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக கடந்த 2029 ஆம் ஆண்டு கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் சிஐடியு மாவட்ட செயலாளர் அனிபா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .













