கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் அமைந்துள்ள பழமையான அரசடி வினாயகர் கோயில் புனரமைப்பு பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தத பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அஷ்ட பந்தன் பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேக திருவிழா கடந்த 29 தேதி துவங்கி பல்வேறு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது .
யாக குண்டத்தில் பூஜிக்கப்பட்ட கலசத்தை வேத பண்டிதர்கள் ஊர்வலமாக கோயிலை வலம்வந்த பின்னர் வினாயகர் சன்னதி விமானத்திலும், துர்கா சன்னதி விமானத்திலும், சாஸ்தா சன்னதி விமானத்திலும் ஆலய நுழைவு வாயில் கோபுர கலசத்திலும் புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.
வாழ்தரங்கில் வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர் மற்றும் ஆன்மீக குரு ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் ஆசி வழங்கினார். தொடர்ந்து அன்னதானம் உட்பட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.














