மயிலாடுதுறை சித்தர் காடு சந்தைப்பேட்டை பகுதியில், நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து சேதம், தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர் ஒருவருக்கு காயம், தீ கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது :-
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் பகுதியில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ மளமளவென்று பரவியது, தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடும் முயற்சிக்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மூன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இச்சம்பவத்தில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயன்ற போது வீட்டுக்குள் இருந்த சிலிண்டர் தீ பட்டு திடீரென வெடித்ததில் தீயணைப்பு வீரர் ஹரிஹரன் வயது 29 என்ற வீரருக்கு முகத்தில் 10% தீக்காயப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நள்ளிரவில் தீ மளமள என்று பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்














