September 8, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சுற்றுச்சூழலை பாதுகாக்க என்பதன்மூலம் இப்போதே களமிறங்கசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

by Satheesa
June 8, 2026
in News
A A
0
அண்ணாமலை சென்னை விமான நிலையத்திலிருந்து ECR சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் வந்தடைந்தார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூரில் சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை அழித்து, நீர்நிலைகளை அழித்து, சுற்றுச்சூழலை சீர்கெடுக்கும் நிலையை கைவிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அரசுடன் பொதுமக்களும் கைகோர்த்து செயல்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க #Nowforclimate என்பதன் மூலம் இப்போதே களமிறங்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை*

இந்த பரந்துபட்ட பூமியையும், அதன் மீது உள்ள இயற்கை வளங்களையும் காப்பாற்றும் சுற்றுச்சூழல் நிகழ்வுகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நவீன விஞ்ஞான, தொழில்துறை வளர்ச்சி காரணமாக சுற்றுச்சூழல் கடுமையாக மாற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை முறையாக பாதுகாக்க தவறவிட்டதன் விளைவுகளை, மனிதர்கள் தற்போது அனுபவிக்க தொடங்கிவிட்டனர். மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையான உறவு மிகவும் முக்கியமானது.

சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பொருத்தமட்டில், ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளத்திலும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் அடிப்படையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டின் உலகளாவிய மையக்கருத்தாக “இயற்கையில் இருந்து உத்வேகம் பெறுவோம்.. கால நிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக..” Inspire by Nature: For climate,For our future என்ற கருத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால நிலைக்காக #இப்போதே செயல்படுவோம் என்ற ஹேஷ்டேக் #Nowforclimate மூலம் பிரச்சாரம் முழக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருவாரூர் வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வனம்.கலைமணி கூறும்போது…

சிறு குழந்தைகள், சிறுவர்கள் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் அதனை வளர்த்தெடுக்க கூடிய பொறுப்பு பெரியோர்களுக்கு உண்டு. ஆனால் அவர்கள் அதை செய்ய தவறி விடுகின்றனர். இதனால் சிறுவயது முதல் சுற்றுச்சூழல் ஆர்வத்தில் இருந்து வரும் குழந்தைகளின் மனம் மாற்றப்பட்டு சுற்றுச்சூழல் மேலும் பாதிப்புக்கு உள்ளாகிறது .

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் தவறவிட்ட விஷயங்கள் எவ்வளவோ உண்டு. நமது முன்னோர்கள், நமக்காக, எந்த வித இயந்திரங்களும் இல்லாமல், உருவாக்கிக் கொடுத்த நீர் நிலைகளை பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துகிறோம். நம் வீட்டில் உள்ள குப்பை வெளியே சென்றால் போதும் என்ற மனநிலை தான் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் தனியார்மய, தாராளமய கொள்கைகளால், நுகர்வு கலாச்சாரம் அதிகமாகி வருகிறது. இதுதான் நம் உலகத்தை திணறடித்து வருகிறது. நுகர்வு கலாச்சாரம் மூலம் தேவையற்றதை வாங்கி குப்பையாக மாற்றும் நாம், குப்பை மேலாண்மையை சரிவர கையாள முடியாமல் அரசுகள் தவிக்கின்றன. வீட்டிலிருந்து நாம் கொடுக்கும் குப்பையை தரம் பிரித்து தர வேண்டும்.நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். மேலும் குப்பைகளை எரிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

வளர்ச்சி என்ற பெயரில் காடுகள் அழிப்பு, சாலையோரம் மரங்கள் அழிப்பு, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஏற்கனவே நமது முன்னோர்கள் நட்டு வைத்த நாட்டு மரங்களை முற்றிலும் அழிப்பது, சாலை விரிவாக்கத்தின் போது நீர் நலைகளை பாதி அளவு ஆக்கிரமித்து நீர் நிலைகள் அளவை குறைப்பது, இவ்வாறு வளர்ச்சி என்ற பெயரில் அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் செய்வது சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ளது‌.

சுற்றுச்சூழல் பேணி பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டி இருந்தாலும், தனி நபர்கள் நாமும் ஒரு சில விஷயங்களை செய்தாக வேண்டும். குறிப்பாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் , பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும், பிளாஸ்டிக்கை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், வீட்டில் இருந்தே குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும், பொது இடங்களில் ஒவ்வொருவரும் ஒருவரும் மரக்கன்று நட்டு பராமரிக்கலாம், இவ்வாறு நாம் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட வருங்கால சந்ததிக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரிய அளவில் கை கொடுக்கும் என நம்பிக்கையுடன் பேட்டி அளித்தார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

TVKஅரசை கண்டித்து திருவாரூர் கூட்டுறவு சங்கம் முன்பு ADMKசார்பில் ஆர்ப்பாட்டம்

Next Post

திருத்துறைப்பூண்டி டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

Related Posts

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்
News

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா
News

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்
News

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்
News

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026
Next Post
அண்ணாமலை சென்னை விமான நிலையத்திலிருந்து ECR சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் வந்தடைந்தார்

திருத்துறைப்பூண்டி டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில்

September 30, 2025
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

0
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

0
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026

Recent News

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.