சீர்காழி அருகே மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 473 மதிப்பெண் பெற்று அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவியை பாராட்டிய கிராம மக்கள்
மேல் படிப்பு படிப்பதற்கும் ,வீடு கட்டி தருவதற்கும் அரசு உதவ மாணவி கோரிக்கை
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதில் மயிலாடுதுறை மாவட்டம சீர்காழி அருகே காடாகுடி கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகள் அபர்ணா பேருந்து வசதி இல்லாத குக் கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் நடந்து சென்று வைத்தீஸ்வரன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் இவரது தந்தை – தாய் கூலி வேலை செய்து அபர்ணாவை படிக்க வைத்து வருகின்றனர், அபர்ணா வீடு ஒரு சிறிய அளவிலான குடிசை வீட்டில் வசித்து வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு பெரிய சிரமமாக உள்ள வீடாகும் சொல்ல போனால் நிற்பதற்கே கூட கஷ்டம் மேலும் இந்த வீடு கூரைகள் சரிவர இல்லாததால் மழை காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் முழுவதுமாக ஒழுகும் அவல நிலையில் வசிப்பதற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருந்து வருகின்றனர் இந்த நிலையிலும் வறுமை ஒரு பக்கம் வாடினாலும் படிப்பில் தனது ஆர்வம் குறையாத அபர்ணா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 473 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகளில் முதலீடம் பெற்றுள்ளார் அபர்ணா பாடங்களில் பெற்றுள்ள மதிப்பெண்கள் தமிழ் -97, ஆங்கிலம் -94, கணிதம் -93 அறிவியல் -96, சமூக அறிவியல் -93 ஐந்து பாடங்களிலும் பெற்றுள்ள மதிப்பெண் -473 அபர்ணா மேல்படிப்பு படிப்பதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் மருத்துவ படிப்பு படிக்க தான் விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளார் மேலும் தங்கள் வசிப்பதற்கு போதிய வீடு வசதி இல்லாமல் இருப்பதால் தமிழக அரசு தங்களுக்கு அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்













