சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.கோட்டாட்சியர் விசாரணை.இறப்பிற்கு காரணமாணவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் தர்ணா போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சரஸ்வதி விளாகத்தை சேர்ந்தவர் சரண்யா இவரும் மாங்கணாம்பட்டு பகுதியை சேர்ந்த ஜோதிமாறன் என்பவருமா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்துள்ளனர். சரண்யா இரண்டு மாத கர்பிணியாக உள்ளார் இன்நிலையில் நேற்று மதியம் ஜோதிமாறன் உறவினர் வீட்டில் சரண்யா தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 வாகனம் மூலம் சீர்காழி அரசு மருத்துவ மணைக்கு கொண்டு வந்தனர்.பரிசோதித்த மரூத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து சரண்யாவின் உடல் சீர்காழி அரசு மருத்துவமணையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் சரண்யாவின் தந்தை ராஜேந்திரன் தனது மகள் திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த நிலையில் ஜோதிமாறன் மற்றும் அவர்களது உறவினர்கள் சரண்யாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர்.எனது மகள் இறப்பில் சந்தேகம் இறப்பதாகவும்.எனது மகள் இறப்பிற்கு காரணம் ஜோதிமாறன் மற்றும் அவர்களது உறவினர்கள் தான் காரணமென கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும் இறந்த சரண்யாவின் உடல் உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என அவரது உறவினர்கள் மருத்துவமணை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த கொள்ளிடம் காவல் ஆய்வாளர் ராஜா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அப்போது இறப்பிற்கு சம்பந்தமான நபர்களை விரைவில் கைது செய்வதாக கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.முன்னதாக கோட்டாட்சியர் சுரேஷ் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது













