ரயில்வே துறையில் ஆட்குறைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மாநில துணை தலைவர் அருளரசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதான கோரிக்கையாக ரயில்வே துறையில் பணியாற்றும் 30ஆயிரம் பணியாளர்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரயில்வே துறையில் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற வலியுறுத்தியும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
அப்போது ஒன்றிய பாஜக அரசின் ஆட்குறைப்பு முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய பாஜக அரசு கண்டித்து மாவட்ட செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.















