உலக சுகாதாரத்தை முன்னிட்டு துணிக்கடை ஊழியர்கள் நடத்திய வாக்கத்தான்.400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
உலக சுகாதார நிறுவனம் நிறுவப்பட்ட தினமான ஏப்ரல் 7 ம் தேதி உலகம் முழுவதும் உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு திருவாரூர் பனகல் சாலையில் இயங்கி வரும் சீமாட்டி துணிக்கடை சார்பில் நிறுவனர் எம் எஸ் பசீர் அஹமத், எம் எஸ் ஆசிப் அலி தலைமையில் வாக்கத்தான் நடைபெற்றது.திருவாரூர் பனகல் சாலையில் தொடங்கிய இந்த வாக்கத்தான் இப்பேரணியை டாக்டர் சண்முகம் மற்றும் வர்த்தக சங்க தலைவர் பாலு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
திருவாரூர் பனகல்சாலையில் தொடங்கிய வாக்கத்தான் கீழ வீதி நேதாஜி சாலை விஜயபுரம் மார்க்கெட் ரயில் நிலையம் பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் தொடங்கிய இடத்தை வந்தடைந்தது.இதில் துணிக்கடையில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையிலும் உடல் நலனை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்.மேலும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும் நடைபயிற்சியின் அவசியம் குறித்தும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் முழுக்கங்களை எழுப்பியபடியும் இந்த வாக்கத்தானில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை
மேலாளர் வினோத் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.

















