அரசு பள்ளியின் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த பதினோராம் வகுப்பு மாணவன் பள்ளியின் வகுப்பறையில் விஷ பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த கேத்தனூரைச் சேர்ந்த முருகானந்தம், ராதா தம்பதியரின் மகன் சிவபிரகாஷ்(16) என்கிற மாணவன், வகுப்பில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுக்கும்போது விஷப்பாம்பு அவரை தீண்டி உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சேர்த்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிவப்பிரகாஷ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பள்ளியில் வகுப்பறையில் விஷ பாம்பு கடித்து பரிதாபமாக மாணவன் உயிரிழந்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

















