கிராமப்புற மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட தனியார் பள்ளி நிர்வாகம் நடத்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி. நானும் கிராமப்புறத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்றவன் தான் இது போன்ற அறிவியல் கண்காட்சிகள் மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என புகழாரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களின் அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு அறிவியல் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சியை பள்ளி நிர்வாகம் நடத்தியது. இந்த அறிவியல் கண்காட்சியில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் பெட்ரோல் இல்லாமல் கால்சியம் கார்பனேட் கல்லின் உதவியுடன் கேசில் இயங்கும் வாகனம். மிதிவண்டியில் இடம் வளம் திரும்புவதற்கு ஏதுவான சிக்னல் லைட் எல் கே ஜி யில் பயிலும் மழலையர் கண்டுபிடித்த தண்ணீர் மறுசுழற்சி விண்வெளி மண்டல மாதிரி உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி ஜேம்ஸ் பள்ளி மாணவ மாணவியரின் படைப்புகளை பார்த்து வியந்து பின்பு அவர் கூறுகையில்…
அறிவியல் மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். பாடங்களில் கற்கும் அறிவியல் செயல் முறையில் பயன்படுத்தும் பொழுது பொறியியல் மருத்துவம் போன்ற துறைகளிலும் வாழ்க்கை தரத்தையும் தொழில்நுட்பம் உயர்த்தும். இவை அனைத்தும் குழந்தை பருவத்தில் இருந்தே துவங்குகிறது . நல்ல எதிர்காலத்திற்கு குழந்தை பருவத்திலிருந்து பயிற்சிகள் துவங்க வேண்டும். அதுவும் கிராமங்களில் இருந்து துவங்குகிறது. கேரள மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து நான் தற்போது ஐஎஸ்ஆர்ஓ வில் பணிபுரிகிறேன். அதற்கு முக்கியமான காரணம் இதுபோன்று பயிற்சி அளிக்கும் பள்ளிகள். அரசு பள்ளிகளில் நான் பயின்றேன். நான் பயின்ற காலங்களில் இதுபோன்று அறிவியல் கண்காட்சிகள் நடப்பது கடினம். தற்போது பன்மடங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆர்வமுடன் மாணவர்களுடன் இணைந்து அறிவியல் கண்காட்சிகளில் பங்களிக்கின்றனர். மழலையர் குழந்தைகளும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பது வருங்காலத்தை வளப்படுத்தும் என கூறினார்.

















