February 12, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மதுரையில் உள்ள கோரிப்பாளையம்- சிம்மக்கல் இடையே மேம்பாலப் பணிகள் விரைவாக நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் விரைவில் குறையும் பொதுக்கள் மகிழ்ச்சி

by sowmiarajan
November 8, 2025
in News
A A
0
மதுரையில் உள்ள கோரிப்பாளையம்- சிம்மக்கல் இடையே மேம்பாலப் பணிகள் விரைவாக நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் விரைவில் குறையும் பொதுக்கள் மகிழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை மாநகரில் கோரிப்பாளையம் ஒரு முக்கியமான சந்திப்பாக உள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், தமுக்கம் மைதானம், அமெரிக்கன் கல்லூரி போன்ற முக்கிய இடங்கள் அருகில் இருப்பதால், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய இடமாக இது திகழ்கிறது. மேலும், மாட்டுத்தாவணி, அண்ணா நகர் போன்ற பகுதிகளில் இருந்து சிம்மக்கல், தெற்குவாசல் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகவும் கோரிப்பாளையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கோரிப்பாளையம் – சிம்மக்கல் இடையிலான சாலையை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ப, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் வைகை வட மற்றும் தென்கரைகளில் புதிய பைபாஸ் சாலைகள், மதுரை சுற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனுடன், கோரிப்பாளையம் மற்றும் மேலமடை சந்திப்புகளில் புதிய மேம்பாலங்களும், வைகை வடகரையில் ஆரப்பாளையம் காமராஜர் பாலத்திலிருந்து சமயநல்லூர் சந்திப்பு வரை புதிய பைபாஸ் சாலையும் அமைக்கப்பட்டு வருகின்றன. கோரிப்பாளையம் மேம்பாலத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தெற்குவாசல் சந்திப்பில் சாலை விரிவாக்கத்துடன் கூடிய புதிய பாலம் மற்றும் மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரசுக்கு மீண்டும் கருத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோரிப்பாளையத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் முடிந்தால், அங்கு போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும்.

இதனுடன், அங்கிருந்து 2.5 கி.மீ. தூரம் வரை பெரியார் பேருந்து நிலைய சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் மாற்றம் செய்ய முடியும் எனத் தெரிவித்தனர். வைகை வடகரை, தென்கரை பைபாஸ் சாலைகள் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் தென் மாவட்டங்களுக்குச் செல்லவும், கோரிப்பாளையம், மேலமடையில் கட்டப்படும் புதிய மேம்பாலங்கள் நகர் பகுதிகளுக்குள் தடையற்ற வாகனப் போக்குவரத்துக்கும் வழிவகுக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனுடன், சிம்மக்கல் முதல் பெரியார் பேருந்து நிலையம் வரையிலான சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டால், மாநகரின் உள்பகுதியில் நிலவும் நெரிசல் முற்றிலுமாக கட்டுக்குள் வரும். மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், அதற்கு ஏற்றாற்போல் தடையற்ற வாகனப் போக்குவரத்துக்கு உதவிடும் வகையில் சாலை வசதி அமைய வேண்டும். அதற்கு, உள்ளூர் வாகனப் போக்குவரத்து மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி, சிம்மக்கல் சாலையை விரிவாக்கம் செய்ய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கே.கே. நகரில் இருந்து உத்தங்குடி வரை புதிய மேம்பாலம் கட்டினால் புறநகர் மக்களுக்கும், அவசர ஊர்திகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: bridgedistrict newsdmkmaduraiMADURAI NEWSmk stalinPUBLIC NEWStamilnaduTN GOVERNMENT
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தென்காசியில் வாக்காளர் சிறப்புத் திருத்தம்: ஜனநாயகம் காக்கும் கையெழுத்து இயக்கம் தொடக்கம்!

Next Post

“நீட் சதியில் புதிய திருப்பம்: போலி மதிப்பெண் சான்றிதழால் பழனி மாணவி சிக்கினார் — கல்வி மோசடி கும்பலை போலீசார் பிடிக்க வேட்டை”

Related Posts

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு
News

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி
News

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை
News

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 
News

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026
Next Post
“நீட் சதியில் புதிய திருப்பம்: போலி மதிப்பெண் சான்றிதழால் பழனி மாணவி சிக்கினார் — கல்வி மோசடி கும்பலை போலீசார் பிடிக்க வேட்டை”

"நீட் சதியில் புதிய திருப்பம்: போலி மதிப்பெண் சான்றிதழால் பழனி மாணவி சிக்கினார் — கல்வி மோசடி கும்பலை போலீசார் பிடிக்க வேட்டை"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

July 31, 2025
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

0
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

0
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

0
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

0
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026

Recent News

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.