எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்*
தமிழக முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி நீர்நிலைகளுக்கு சென்று அரிசி பழங்கள் வைத்து வழிபாடு நடத்தி, மஞ்சள் கயிறு கட்டி வழிபடுவது வழக்கம்.
அதன்படி இன்று திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் நீர் வராததன் காரணமாக, தண்ணீர் உள்ள ஒரே இடமான உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான கமலாலய திருக்குளத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே உயிர் பயத்துடன் ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் ஆடிப்பெருக்கு கொண்டாடும் பொதுமக்களின் தலைக்கு மேலே மின் கம்பி அறுந்து தொங்கி வருகிறது. இந்த மின்கம்பி எப்போது கீழே விழுந்து உயிர் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.
திருவாரூர் நகராட்சி அலுவலகம் நேர் எதிரே கமலாலய திருக்குளம் அமைந்துள்ள போதும், இதனை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்த மின்கம்பமானது கடந்த பல நாட்களாக இவ்வாறுதான் தொங்கிக்கொண்டு வரும் நிலையில், இதனை மின்சார துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று கமலாலயக் குளக்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடி வரும்போது எப்போது இந்த மின் கம்பி அறுந்து விழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கு கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து மின்வாரி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்.
பேட்டி : பரணிதரன் மற்றும் ராஜகோபால் – பொதுமக்கள்

















