மயிலாடுதுறை அருகே சித்தர்காடு வண்டிகாரத்தெருவில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ கோவிந்தன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு வண்டிகாரத்தெருவில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ கோவிந்தன் ஆலயம் பழைமை மாறாமல் புணரமைப்பு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து கடந்த 12 ஆம் தேதி காலயாக சாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசால பூஜைகள் நிறைவுற்று பூரணாஹூதி செய்விக்கபட்டு புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாளத்துடன் சென்று கோபுர கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.