தரங்கம்பாடி அருகே ஆக்கூர் கிராமத்தில் உள்ள ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் நூற்றக்கணக்கானோர் தீமிதித்து நேர்த்திக்கடன். பல பக்தர்கள் தரையில் நடந்த செல்வது போன்று தீக்குழியில் நடந்து சென்று தீ மிதித்தது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூரில் பிரசித்திபெற்ற சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இவ்வாலயத்தில் திருமண வரம் வேண்டுபவர்களுக்கு திருமணத்தடை நீக்கியும், குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தந்தும் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவளாக ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் விளங்குவதால் ஆக்கூர் சுற்றுவட்டாரப் பகுதியின் பல்வேறு கிராமத்தினர் தங்கள் குல தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர். இக்கோயிலின் தீமிதி திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினந்தோறும் ஶ்ரீசீதளாதேவி மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வீதியுலாவாக சென்று காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு இரட்டைகுளக்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு கரகத்துடன் பால் காவடி, பறவை காவடி ,அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் வாயில் 16அடிநீள அலகு குத்தியும் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த’ தீக்குழியில் சக்திகரகம் இறங்க தொடர்ந்து மஞ்சள்உடை உடுத்தி விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். பல பக்தர்கள் தரையில் நடந்த செல்வது போன்று தீக்குழியில் நடந்து சென்று தீ மிதித்தது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.













