திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பெருவிழாவில் சிறப்பு பெற்ற தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தேர் இழுத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை யொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெருவிழாவில் 7,ம் நாளான இரவு முருகப்பெருமான் தேர் பவனி நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மேள தாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து தேர் மலைக் கோயில் மாட வீதியில் பவனி நடைபெற்றது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் தேர் இழுத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.













