தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களுடன் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் மற்றும் மிரட்டல் பதிவுகள் பகிரப்பட்டதாக கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் பிரிவில் நடந்த விசாரணையில், பதிவுகளை செய்ததும், கொலை மிரட்டல் விடுத்ததும் நான் தான் என்பதை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து சந்தோஷை போலீசார் கைது செய்து, அவரை தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.