வாடிகனில் புதிய போப் தேர்வு செய்வதற்கான முதல் வாக்கெடுப்பில் கரும்புகை வெளியேறியதால் அது தோல்வியில் முடிந்தது தெரிய வந்துள்ளது. கத்தோலிக்க தலைவரான போப் பிரான்சிஸ் காலமானதை அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியுள்ளது.
அதன்படி சிஸ்டைன் தேவாலயத்தில் 80 வயதுக்குட்பட்ட 133 கார்டினல்களும் தங்கவைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுபவரே புதிய போப்பாக தேர்வு செய்யப்படும் நிலையில், கார்டினல்கள் ரகசிய முறையில் வாக்களித்தனர்.