August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திண்டுக்கல்லில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 280 பேருக்கு ரூ.93.67 லட்சம் நலத்திட்ட உதவி

by sowmiarajan
December 4, 2025
in News
A A
0
திண்டுக்கல்லில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 280 பேருக்கு ரூ.93.67 லட்சம் நலத்திட்ட உதவி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் ஓம் சாந்தி CBSE மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.12.2025) நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2025 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, மொத்தம் 280 பயனாளிகளுக்கு ரூ.93,67,115 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மீது தனிக் கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக ஒரு துறையினை உருவாக்கி அத்துறையினைத் தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை மற்ற குழந்தைகளுக்கு இணையாகச் சமுதாயத்தில் உயர்த்தும் நோக்கில் அரசு செயலாற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் முதன்முதலாக உலக வங்கியின் ஒத்துழைப்போடு “தமிழ்நாட்டின் உரிமைகள்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடுதோறும் சென்று மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை, பஸ் பாஸ் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமுதாயத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை ஒரு அங்கமாக மாற்றும் நோக்கில், பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்போடு செயலாற்றி வருவதைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் இக்குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், இந்த நாள் முழுவதையும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான நாளாகக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மொத்தம் 280 பயனாளிகளுக்கு, சுமார் ரூ.93 லட்சத்து 67 ஆயிரத்து 115 மதிப்பீட்டிலான உதவிகள் வழங்கப்பட்டன. இதில், தலா ரூ.1,01,800 மதிப்பீட்டில் 65 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும் (Retrifitted Petrol Scooters), 96 பயனாளிகளுக்கு செயலிகளுடன் கூடிய திறன்பேசிகளும் (Smart Phones), 50 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், 5 பயனாளிகளுக்கு ரியோ போல்ட் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், 20 பயனாளிகளுக்கு மடக்குச் சக்கர நாற்காலிகளும், 35 பயனாளிகளுக்குக் காதொலி கருவிகளும் மற்றும் 9 பயனாளிகளுக்கு மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புச் சக்கர நாற்காலிகளும் அடங்கும்.

இந்த விழாவில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 26 நபர்களுக்குப் பரிசுத் தொகையினையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சி. தங்கவேலு, சமூக நல அலுவலர் திருமதி சா.காலின்செல்வராணி அவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Tags: beneficiary servicesdindigulgovernment aidsocial supportwelfare assistance
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மகளிர் மேம்பாட்டுச் சேவைகளுக்கான 2026-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது

Next Post

நீதிமன்ற உத்தரவை மீறி பெருமாள் கோயில்பட்டியில் தீபம் ஏற்ற 144 தடை

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
News

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்
News

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
நீதிமன்ற உத்தரவை மீறி பெருமாள் கோயில்பட்டியில் தீபம் ஏற்ற 144 தடை

நீதிமன்ற உத்தரவை மீறி பெருமாள் கோயில்பட்டியில் தீபம் ஏற்ற 144 தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.