விழுப்புரம் விழுப்புரத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, நகரப் பகுதியான ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோகுலகிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.
காலையிலேயே சுவாமிக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல, விழுப்புரம் கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்திருக்கும் பாலகிருஷ்ணன் ஆலயத்திலும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பஜனை கோவில் தெருவில் உறியடி திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. இந்த உறியடி நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு, உறியடித்து மகிழ்ந்தனர். இந்த விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். அப்போது பொதுமக்களுக்கு பொங்கல் கேசரி லட்டு பொது மக்களுக்கு பிரசாதமாக வாழினார்













