பள்ளி வாகனம் மோதி ஒன்றை வயது குழந்தை உயிரிழப்பு சீர்காழி அருகே பெரும் சோகம்
சீர்காழி அருகே ஆனந்த கூத்தன் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி அவரது மனைவி அரசி இவர்களுடைய இரண்டு பெண் குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்புவதற்காக கடுக்காமரம் நேதாஜி நகர் பகுதியில் காலை புத்தூரில் உள்ள மீனாட்சி வித்யாலயா பள்ளி வாகனத்தில் அரசி தனது இரண்டு பெண் குழந்தைகளை ஏற்றியுள்ளார். அப்போது அரசி தன்னுடன் ஒன்றை வயது உடைய மகிழ்வேலன் என்ற ஆண் குழந்தையும் கையில் தூக்கி வந்துள்ளார். பள்ளிக்கு பெண் குழந்தைகளை வேனில் ஏற்றி விடுவதற்காக ஆண் குழந்தையை கீழே இறக்கி நிக்க வைத்துள்ளார். அப்போது பள்ளி வாகனம் புறப்பட்டபோது பின் சக்கரத்தில் ஒன்றை வயது ஆண் குழந்தை அடிபட்டு காயம் அடைந்தது உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர் இறந்த குழந்தையின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது இது குறித்து பள்ளி வாகன ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது














