அமைச்சர் நேருவின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த திமுக கட்சி நிர்வாகிகள். திருச்சியில் புதிதாக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற வேண்டி , ஒண்டி கருப்பசாமி ஆலயத்திற்கு 15 கிடாக்கள் வெட்டி, கட்சி நிர்வாகிகளுக்கு விருந்து அளித்துள்ளார் அமைச்சர் நேரு . ஆனால் ‘முறையான அழைப்பு இல்லை’ என கூறி கட்சி நிர்வாகிகள் பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் .
திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூரில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் , 492 கோடி மதிப்பு கடந்த செலவில், 2022ல-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையும் கட்டும் பணி துவங்கியது. மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் கட்டிட பணிகள் முடிந்து, வருகின்ற மே, 9 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட உள்ளது .
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா சிறப்பாக நடக்க வேண்டி, அப்பகுதியில் உள்ள ரெட்டமலை ஒண்டி கருப்பசாமி கோவிலில், நேற்று, பதினைந்து கிடாக்கள் வெட்டி, அமைச்சர் நேரு வழிபாடு நடத்தி இருக்கிறார் .
கிடாக்கள், 250 கிலோவுக்கு மேல் கோழிக்கறி உள்ளிட்டவை சமைக்கப்பட்டு, கோவில் வளாகத்திலேயே, தி.மு.க., கட்சி நிர்வாகிகளுக்கு, நேற்று மதியம் சமைத்து உணவளித்து உள்ளனர் . இந்த ஏற்பாடுகளை முன்னின்று திருச்சி மத்திய மாவட்ட துணை செயலர் முத்துச்செல்வம் கவனித்து உள்ளார் .
முத்துச்செல்வம் கட்சியில் தனக்கு பிடிக்காத நிர்வாகிகளுக்கு விருந்து குறித்து முறையாக தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திருச்சி மேற்கு தொகுதி கட்சி நிர்வாகிகள் பலரும் ஆட்டுக்கறி விருந்து விவகாரத்தில் அமைச்சர் கே.என் நேரு மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.