சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு : ஏ.எஸ்.பி. உயிரிழப்பு ; தீவிர விசாரணை நடைப்பெறுகிறது !

ராய்ப்பூ :
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் உதவி மேல் காவல் கண்காணிப்பாளர் (ASP) ஆகாஷ் ராவ் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்புப் படையினர் பலர் காயமடைந்துள்ளனர் என ஐ.ஜி. சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம், கோண்டா-எரபோரா சாலையில் உள்ள டோண்ட்ரா பகுதியில் நடந்தது. நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், நடவடிக்கையில் இருந்த ASP ஆகாஷ் ராவ் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா இதுகுறித்து கூறியதாவது :
“ASP ஆகாஷ் ராவ் மிகுந்த துணிச்சலுடன் பணியாற்றியவர். அவரது உயிர்தியாகம் எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் பல்வேறு விருதுகளை பெற்றவர். பதுங்கி இருக்கும் நக்சலைட்டுகளை சிக்கவைத்துத் தண்டிக்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது,” என்றார்.

தற்போது சம்பவ இடத்தில் உயர் பாதுகாப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Exit mobile version