சிறு வயது முதலே கண்புரையால் பாதிக்கப்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்ட சிறுவனுக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு கண் பார்வையை மீட்டுத் தந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 12 வயது சிறுவனுக்கு சிறுவயது முதலே பார்வை குறைபாடு ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து வந்து பரிசோதனை செய்தனர்
அப்போது சிறுவனுக்கு கண்புரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது இதனால் தான் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
இதனை அடுத்து சிறுவனுக்கு இரு கண்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது கண் பார்வை முழுமையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து சிறுவனுக்கு தேவையான மருந்துகளை வழங்கி மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து கண் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் கணபதி ராஜேஷ் கூறுகையில்
வயதானவர்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் வருவது சாதாரணமானது, ஆனால் சிறுவர்களுக்கு கண்புரை பாதிப்பு வருவது அரிதான ஒன்று, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரிவித்தனர்
தொடர்ந்து சிறுவனுக்கு முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டு கண்பார்வையை கொடுத்துள்ளோம் என்று தெரிவித்த மருத்துவர்கள்
சிறுவர்களுக்கு கண்பார்வை தொடர்பான பரிசோதனை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்
பேட்டி
- மருத்துவர் கணபதி ராஜேஷ் (கண் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர்)
- முத்து சித்ரா (தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்)













