ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, நடைபெற்றது, பாகவத நாட்டிய நாடகத்துடன் கூடிய, பாகவத பஜனை, ஆச்சாரியார் ஆசீர்வாத நிகழ்ச்சி நடைபெற்றது:-
ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் சித்தியடைந்து 35 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவரது ஆராதனை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பெளர்ணமிக்கு அடுத்து நடைபெறுவது வழக்கம். அதன்படி மயிலாடுதுறையில் ராகவேந்திர ஆராதனை கமிட்டி சார்பில் ராகவேந்திரா சுவாமிகள் 31வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் சுவாமி படத்திற்கு சிறப்பு ஆராதனைகள், செய்யப்பட்டது. பாகவத பஜனை, பாகவத நாட்டிய நிகழ்ச்சி, சுவாமி ராகவேந்திரர் படத்திற்கு புஷ்பாஞ்சலி, கர்நாடக இசை பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக, 25 வகையான பலகாரங்களை கொண்டு சிறப்பு நெய்வேத்தியம் செய்யப்பட்டு செய்யப்பட்டு படத்திற்கு மஹாதீபாராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று , தரிசனம் செய்தனர். ஞானகுரு பாகவதரின் பாகவத நாட்டிய நடனம் மற்றும் , பாகவத பஜனை, ஆச்சார்யார் ஆசீர்வாதம் ஆகியவை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.















