சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் இரா.சரவணன். இவர் தனது சமூக வலைதள பதிவில், “அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் தம்பி சிவகார்த்திகேயன் சொல்லி இருந்தார். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் விட்டு, பின்னர் மறந்தே போய் விடுவார்கள்.
ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமனின் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார் என்றார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிக்கிறார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார். இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தா, மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.