நடிகர் ரவி மோகன் தற்போது தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து வழக்கில் இருக்கிறார். இந்த வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவரைச் சுற்றிய செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அண்மையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமண விழாவில், ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டதையடுத்து, இந்த சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அவரது மனைவி ஆர்த்தி சமூக வலைதளத்தில் தனது குடும்ப வாழ்க்கையைப்பற்றி ஒரு பதிவு வெளியிட்டு பேசுப்பொருளானார்.
இந்நிலையில், பாடகி கெனிஷா தன்னுடைய நிகழ்ச்சிக்கான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “எனக்கு ஜெயம் ரவி மிகவும் பிடிக்கும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. என் பாடல் நிகழ்ச்சிக்கு கெஸ்ட்டாக ஜெயம் ரவி வந்திருந்தார். நான் மேடையில் பாடியபோது யாரும் கை தட்டவில்லை. மிகவும் நெருக்கடியாக இருந்தது. அப்போது ரவி தான் பேசிப் பாராட்டி, அனைவரையும் கைதட்டச் செய்தார்,” என்கிறார் கெனிஷா.
இவ்வாறு அவர் பகிர்ந்த இந்த அனுபவம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.