நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிஸியாக நடித்து வருகிறார் . நடிப்பது மட்டுமின்றி இசையிலும் ஸ்ருதிஹாசன் அசத்தி வருகிறார் . தற்போது அவர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் கூலி படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது . இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் .
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ஸ்ருதியிடம் நடிகர் பின்னணி குடும்பத்தில் இருந்து வந்ததால் உங்களுக்கு மிகவும் எளிமையாக அனைத்தும் கிடைத்து விட்டதாக நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர் .
இதற்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன் “கண்டிப்பாக இல்லை. நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் என் வாழ்க்கையில் நடந்தவற்றை குறித்து பலருக்கும் தெரியாது.என் அப்பாவும், அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்த பின் என் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அப்பாவை பிரிந்து அம்மாவுடன் நாங்கள் சென்ற பின் எங்கள் வாழ்க்கை நினைத்தது போன்று இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன் அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .