50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி.”
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி 27 -வது வார்டு பகுதியில் ஆத்தா குளம் என்ற குளம் உள்ளது.. அந்த குளத்தினை சுற்றிலும் உள்ள நகராட்சிக்கு உட்பட்ட கே டி ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த ஆத்தா குளம் அந்த பகுதிக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு முக்கிய காரணமாகவும் , கடுமையான மழை பெய்யும் பொழுது இந்த குளம் அந்த பகுதி மக்களுக்கு ஒரு நல்ல வடிகாலாக இருந்துள்ளது. இந்தக் குளம் நிரம்பி அதன் பிறகு வடிகால் வழியாக வாழ வாய்க்கால் பகுதிக்கு தண்ணீர் சென்று விடும்...
இந்த நிலையில் 50 ஆண்டுகளாக இந்தக் குளம் தூர்வாரப்படாமல் சுத்தம் செய்யப்படாமல் நகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு குளம் தூர்ந்து குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த குளத்துக்கு அருகில் ஒரு மின் மாற்றி ஒன்றும் இருக்கிறது மேலும் அடிக்கடி இந்த குளத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாக குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் சுவாசிக்க முடியாத அளவிற்கு புகை கிளம்புவதால் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வருகிறார்கள்... மேலும் ஒட்டப்படும் குப்பை கழிவுகளை கால்நடைகள் உண்பதால் அதற்கு பாதிப்புகள் ஏற்படுகிறது..
சில சமயங்களில தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் அளவிற்கு தீ விபத்து அங்கு ஏற்படுகிறது.. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். .
இது குறித்து திருவாரூர் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்ட பொழுது அந்தப் பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.













