சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை பகுதியில் உடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் தேங்கிய கழிவுநீர்
சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை அருகாமையில் அமைந்துள்ள சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டதில் சாலை முழுவதும் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை வழியாக செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் நோய் தோற்றுப் பருவம் அபாயம் நிலவி வருகிறது ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து தரையில் உள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தி பொதுமக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இந்த சாலை வழியாக கொய்யா தோப்பு மற்றும் அது சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை ஆகும் அத்துடன் இந்த சாலையின் அருகிலேயே பொதுமக்கள் ஓய்வெடுக்கும் பூங்காவும் அமைந்துள்ளது ஆகவே உடனடியாக கழிவுநீர் கால்வாய் உடைப்பு சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்













