பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சென்னை மாநகர போலீசார் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது “ரெட் பட்டன் – ரோபோட்டிக் காப்” (Red Button Robotic COP) என்கிற ரோபோ போலீஸ் இயந்திரங்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்படவுள்ளன.
இதனால் பெண்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், தைரியமாக வெளியே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை ஆபத்தில் இருப்பவரோ (அ) அவருக்கு அருகில் உள்ள நபரோ அழுத்துவதன் மூலம் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பும், அருகில் ரோந்துப் பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.