உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு (மே தினம்), நாளை (வியாழக்கிழமை) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்டிரல் – அரக்கோணம், சென்டிரல் – கும்மிடிப்பூண்டி, சென்டிரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை -தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.