திருவாரூர் நகர் பகுதியில் அடுத்தடுத்து ஏழு வீடுகள் தீபிடித்து எரிந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் தீயணைப்புத் துறையினர் காலதாமதமாக வந்ததால் அதிக வீடுகள் பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ராமலிங்கம் என்பவர் அது வீட்டில் இருந்து பிடித்த தீ அருகே உள்ள ஜீவா ரமேஷ் ஜெயராமன் ஆகிய வீடுகளில் தீ பிடித்து எரிந்துள்ளது . உடனடியாக திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அனைத்து வாகனங்களும் நாளை மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள துணை ஜனாதிபதி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வரும் நிலையில் அனைத்து தீயணைப்பு வாகனங்களும் அங்கே கொண்டு செல்லப்பட்டதாக கூறி அங்கிருந்து வருவதற்குள் நான்கு வீடுகளும் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தன.
இதேபோல் காற்று காரணமாக அருகில் இருந்த மதன், பல்லவன் ஆகியோர் வீடுகளும் எரிந்து சேதம் அடைந்தன .
இந்த தீபத்தில் ஏழு வீடுகள் மற்றும் ஒரு கடை முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது .
பின்னர் தீயணைப்பு துறையினர் அனைத்து வீடுகளையும் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது இது குறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















