ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே உள்ள 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த புகழ் பெற்ற திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த புகழ்பெற்ற அருள்மிகு பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோயில் சூரபத்மனின் இரண்டாவது மகன் சிவப்கதரான ஹிரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம் என்று தலபுராணம் கூறுகின்றது. பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த கோயில், முருகனுக்கு உரிய பாவம் கழிந்ததால், திருவிடைக்கழி என்று அழைக்கப்படுகிறது. முருகனை மனம் செய்ய விரும்பிய தெய்வானை தவம் செய்த தலமாக விளங்கி வரும் திருவிடைக்கழி கோவிலில் சிவபெருமானை பூஜித்த நிலையில் முருக பெருமான் அருள் பாலிக்கிறார். இத்தலம் திருச்செந்தூருக்கு நிகராக போற்றப்படுகிறது. அருணகிரிநாதர் உள்ளிட்டோர் இந்த ஆலயம் குறித்து பாடியுள்ளனர். பல்வேறு தல சிறப்புகளை உடைய இக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி பால்குடம் உள்ளிட்டவைகள் எடுத்து பாதயாத்திரை புறப்பட்டு
திருவிடைக்கழிக்கு வருகை புரிந்தனர் மேலும் ஆடி மாத கிருத்திகை முன்னிட்டு
சுப்ரமணியசாமிக்கு பால் மற்றும் பல்வேறு திரவிய பொடிகள் சந்தனம், இளநீர், தேன் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பாதை யாத்திரை வந்த பக்தர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காலை முதலே சுவாமி தரிசனம் செய்து முருனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்













