உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் நாகர்கோவில் எஸ் எல் பி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்களோடு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.சுற்றுச்சூழல் மாசுபாடு, புவி வெப்பமயமாதல் மற்றும் பல்லுயிரி இழப்பு போன்ற அவசர சவால்களை எதிர்கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ் எல் பி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பள்ளி மாணவர்களோடு சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிறுத்தி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பசுமை தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பசுமை சூழலை அதிக படுத்த வேண்டும் என முயற்சி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் பசுமை சூழலை அதிகப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உறுதிமொழி ஏற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட அணைகளில் அணைகளில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது அதனால் அதிக நீரை தேக்கி வைக்க முடியும் காவல்துறையின் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காற்று காரணமாக மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்தால் உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். எஸ் எல் பி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கிஷோர் வரவேற்றார் நிகழ்ச்சியில் பயிற்சி உதவி ஆட்சியர் மோனிகா தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் அஜிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்















