திமுக அரசின் அமைச்சர்களுக்கு அடுத்து அடுத்து ஆப்பு வைத்து வருகிறது நீதிமன்றம் . அந்த வகையில் ரூ.2 கோடி சொத்து குவித்த வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் தான் ஐ.பெரியசாமி. இவர் 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது இருந்தது.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில் குமார், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 28) நீதிபதி வேல்முருகன் அவர்கள் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவை நீக்க உத்தரவிட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாதங்களில் இறுதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கவனவே செந்தில் பாலாஜி , பொன்முடி ஆகியோரின் அமைச்சர் பதவியை காலி செய்த நீதிமன்றம் அடுத்து ஐ .பெரியசாமி தான் அமைச்சர் பதவியை பறிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.