இந்தியாவின் தலைநகர் டெல்லியில், மே 7 முதல் 9 வரை உலகளாவிய விண்வெளி ஆய்வு மாநாடு (Global Space Exploration Conference – GLEX) நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு, சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (IAF) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) இணைந்து நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் GLEX மாநாட்டில் உலகின் பல முன்னணி நாடுகள் பங்கேற்று வருகின்றன.
மாநாட்டில், சீனா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள், 1,700க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த உயர்மட்ட மாநாட்டில், முந்தைய ஆண்டுகளில் (ரஷ்யா, அமெரிக்கா) கலந்து கொண்ட அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா, இம்முறையில் மட்டும் பங்கேற்கவில்லை என்பது சுருக்கமாக விளக்கப்படவில்லை. இதற்கான முக்கிய காரணமாக, அமெரிக்கா நாசா நிறுவனத்தின் பட்ஜெட்டை 24.3% வரை குறைத்திருப்பதே கூறப்படுகிறது.
நாசாவுக்கு என்ன ஆனது ?
நாசாவில் தற்போது பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு தேவையான நிதி கட்டுப்படுத்தப்பட்டதால், GLEX போன்ற சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பது சவாலாகியுள்ளது.
மேலும், நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கிடையிலான ஒப்பந்தப் போட்டி, மற்றும் அமெரிக்க அரசின் அரசியல் நிலைப்பாடுகள் கூடுதல் காரணமாக கருதப்படுகின்றன. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அரசின் திட்டமிட்ட வகையில் நாசாவின் பட்ஜெட் குறைக்கப்பட்டது. இதனால் பல விண்வெளி ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களாகிய ஸ்பேஸ் எக்ஸ்க்கு மாறியுள்ளன.
GLEX மாநாட்டில் நாசா பங்கேற்காததைக் குறித்து, ISRO தலைவர் நாராயணனிடம் கேட்டபோது, தனியார் நிறுவனங்களின் விவரங்களை பகிர முடியாது எனக் கூறியுள்ளார்.